மும்பை: இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக லாபம் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு மூன்றாம் காலாண்டில் 39.95 பில்லியன் ரூபாய் என நிகர லாபம் பெற்றிருந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லாபம் 97 சதவீதம் உயர்ந்து 78.83 பில்லியன் டாலர் ரூபாய்ப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் 51.49 பில்லியன் ரூபாய்கள் நிகர லாபம் பெறும் என்று தாம்சன் ரீயூட்டர்ஸ் ஈக்கான் தரவுகள் கூறி இருந்தன.
சென்ற ஆண்டுச் சராசரியாகப் பேரலுக்கு 7.36 டாலர் லாபம் பார்த்த நிலையில் ஏப்ரல் நடப்பு ஆண்டில் 8.28 டாலர் என விளிம்பும் உயர்ந்துள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது.
காலாண்டு அறிக்கை வெளியான பிறகு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் பங்குகள் 4.40 சதவீதம் உயர்ந்து 3:17 மணி நிலவரத்தின் படி 416.30 ர்பாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.