8 மாநில தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலை மையப்படுத்திப் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவில் விவசாயத் துறையின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை கட்டமைப்புக்கு 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
விவசாயிகளின் வருமானம்
அடுத்த ஒரு வருடத்தில் விவசாயத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் 1.5 மடங்கு வரை நிச்சயமாக உயரும் என அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம்
11.25 வரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்த அனைத்துத் திட்டங்களும் அறிவிப்புகளும் விவசாயத் துறை சார்ந்து மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு பூங்கா
2018-19ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களில் உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
150 விழுக்காடு உயர்வு
விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஆக இந்த வருடம் விவசாயிகளுக்கு ''அச்சே தின்''.