2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் நாடாளுமன்றத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வந்துவிட்டார்.
நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய நிதி இணையமைச்சர் இந்தப் பட்ஜெட் பொலிட்டிகல் பட்ஜெட் ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
தேர்தல்
2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் மற்றும் 2018ஆம் ஆண்டில் 8 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் காரணத்தால் கண்டிப்பாக மக்களைக் கவரும் பட்ஜெட்டாகவே இருக்கும் என்று ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்திருந்த நிலையில் தற்போது அருண் ஜேட்லியின் பேச்சு உறுதி செய்துள்ளது.
8 மாநிலங்கள்
2018ஆம் ஆண்டில் மட்டும் மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, கர்நாடகம், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறுவதற்காகவே தற்போது மக்களுக்கு அதிகம் நன்மை அளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மக்கள்
இந்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்கள் மற்றும் மாத சம்பளக்காரர்களை மகிழ்விக்கும் வகையில் வருமான வரி வரம்பை தற்போது இருக்கும் 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டுத் திட்டங்கள்
வருமான வரி வரம்பை உயர்த்தும் போது பிபிஎப், என்பிஎஸ், சுகன்யா சம்ரிதி ஆகிய அரசு முதலீட்டுத் திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைக்கவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதையும் நாம் மறுக்க முடியாது.
7வது சம்பள கமிஷன்
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனை அமலாக்கம் செய்யப்பட்டதன் மூலம் மாத சம்பளக்காரர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்கு ஏதுவாகக் குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவை 3 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்துவது சரியான முடிவாக இருக்கும் என எஸ்பிஐ எகோவிராப் அறிக்கை கூறுகிறது.
11 மணிக்கு
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாக 11 மணிக்குப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்குவார்.