டெல்லி: பட்ஜெட் தாக்கலினை துவங்கிய நிதி அருண் ஜேட்லி வேளாண்மை மற்றும் உரகப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார். இந்தி ஆங்கிலம் எனத் தனது உரியினை இரண்டு மொழிகளிலும் வழங்கி வருகிறார்.
பொருளாதாரத்தில் 7வது இடத்தில் 5 வது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்றும், நிர்வாகச் சீர்திருத்தத்தால் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
கூடுதல் மூலதனத்தால் வங்கிகள் கடன் வழங்கு திறன் அதிகரித்துள்ளது.
விவசாயத் துறை வளர்ச்சி, ஏழைகளுக்கு இலவசமாகச் சுகாதாரம் அளிப்பது மத்திய அரசின் நோக்கம் என்று கூறியுள்ளார். எனவே மருத்துவக் காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
வேளாண் வருவாயினை உயர்த்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதி 8% ஆக அதிகரித்துள்ளது