இந்திய மென்பொருள் சேவை மற்றும் ஏற்றுமதியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அபித்அலி நீமுச்வாலா பிப்ரவரி 2016இல் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்திற்குப் பின் வர்த்தக முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நிர்வாக இடத்தில் எவ்விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய நிர்வாக மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
முக்கியத் துறைகள்
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் 39 சதவீதம் எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் டெக்னாலஜி பிரிவு சார்ந்த வர்த்தகத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த இரு பிரிவின் தலைவர்களையும் தற்போது அபித்அலி நீமுச்வாலா தலைமையிலான நிர்வாகம் மாற்றியுள்ளது.
என்.எஸ்.பாலசுப்பிரமணியன்
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் 22.7 சதவீதம் (457 மில்லியன் டாலர்) உற்பத்தி மற்றும் டெக்னாலஜி பிரிவின் மூலம் பெறுகிறது. இப்பிரிவின் தலைவரான என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தற்போது எனர்ஜி, இயற்கை வளம், யூடிலிட்டிஸ் மற்றும் கட்டுமானம் (ENU) பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்மநாபன்
10 வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு ENU பிரிவின் தலைவராக இருக்கும் பத்மநாபன் தற்போது வர்த்தக வளர்ச்சி மற்றும் விற்பனை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
இனிவரும் காலத்தில் விப்ரோ நிறுவனத்திற்குக் கூடுதலான ஆர்டர்களைப் பெற பத்மநாபன் பெரிய அளவில் உதவி செய்வார் என் விப்ரோ நம்புகிறது.
ஏப்ரல் 1
இப்புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக விப்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.