மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் இனி பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால அது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை மத்திய அரசு குறைத்து இருந்தாலும் சாலை மற்றும் கட்டுமான கலால் வரியினை உயர்த்தியதால் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் வாட் வரியினைக் குறைக்குமாறு கொரிக்கை வைத்தது.
சர்வதேச சந்தை
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தியினை அளிப்பதால் சந்தையில் உள்ள தட்டுப்பாடு அதிகம் என்பாதல் தினமும் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது.
சுக்க வரிக் குறைப்பு
சென்ற அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை 2 ரூபாய் வரை மத்திய அரசு குறைத்தது. இதனால் சற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தும் இருந்தது.
பாஜக மாநிலங்கள்
பாஜக மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் போன்றவற்றில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்ட நிலையில் தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தர்மேந்தரப் பிரதான்
செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அரசின் கீழ் வரும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியினைக் குறைத்தால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.