இந்தியாவில் இருந்து சென்று வெளிநாட்டு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாகப் பணிபுரிபவர்களைப் பார்த்து நாம் பெருமை பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் 2017-2018 நிதி ஆண்டில் தற்போது வரை வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்திய தலைமை செயல் அதிகாரிகள் இந்திய நிறுவனங்களுக்கே திரும்ப வந்துள்ளனர்.
இதனைப் பார்க்கும் போது என்ன தான் வெளிநாட்டு மோகம் போன்றவை இருந்தாலும் தாய் நாட்டில் வந்து பணிப்புரிவதை தான் அதிகளவில் இந்தியர்கள் விரும்புகின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே கடந்த ஒரு வருடத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்திய நிறுவனங்களுக்குத் திரும்பி வந்துள்ள தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
டி ஷிவகுமார்
பெபிசிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த டி ஷிவகுமார் ஆதித்யா பிர்லா குழுமத்தில் சேர்ந்துள்ளார்.
சங்கீதா பெண்டுர்கர்
கெலாக்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக இருந்த சங்கீதா பெண்டுர்கர் ஆதித்யா பிர்லா ரீடெய்ல் நிறுவனமான பேன்டலூன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
பன்மாலி அகர்வாலா
ஜிஇ சவுத் ஏசியாவில் இருந்து டாடா குழுமத்தில் சேந்துள்ளார்.
பிபி பாலாஜி
இங்கிலாந்தினை சேர்ந்த ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி டாடா குழுமத்தில் பணிபுரிந்து வருகிறார்.
புனீத் சாட்வால்
டாயிச் ஹாஸ்பாட்டாலிட்டி நிறுவனத்தில் இருந்து வெளியேறி இந்திய ஹோட்டல் நிறுவனத்தினை ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
பாரத் பூரி
மாண்டெலெஸ் சாக்லேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிடிலைட் நிறுவனத்தில் உள்ளார்.
வி சந்தரமவுலி
மாண்டெலெஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிடிலைட் நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறார்.
சாந்தனு கோஷலா
பி&ஜி நிறுவனத்தில் இருந்து வெளியேறி கிராம்ப்டன் கிரீவ்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ராஜீவ் சப்பா
வான்கார்டு லாஜிஸ்டிக்ஸ் யூஎஸ்ஏ நிறுவனத்தில் இருந்து வெளியேறி எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.