பாங்க் ஆப் பரோடா நிறுவனம் குப்தா குழுமத்துடன் உள்ள அரசியல் ரீதியான இணைப்பால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தங்களது வங்கி கிளைகளை எல்லாம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பணத்தினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தென் ஆப்ரிக்கா வங்கி சேவைகள் ஒழுங்கு முறைப்படுத்தும் விவாதித்து வருவதாக அறிக்கை ஒன்றைத் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கி இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை..
குப்தா குடும்பம் தென் ஆப்ரிக்கா அதிபர் ஜாகோப் ஜூமா மகனுடன் வர்த்தக ரீதியாகத் தொடர்பு வைத்துள்ளதாகவும் அதனால் பல மோசடிகள் நடைபெற்றதாக வழக்குள் தொடரப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டதால் பாங்க் ஆப் பரோடா நிறுவனம் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பாங்க் ஆப் பரோடா வங்கி மூத்த அதிகாரியான ஜெயகுமார் ப்ளூம்பெர்க் குவிட்டிற்கு அளித்த பேட்டியில் வெளிநாடுகளில் உள்ள லாபம் அளிக்காத பல கிளைகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் சில நாடுகளில் இருந்து மொத்தமாக வெளியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தென் ஆப்ரிக்கக் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.