2018 -2019 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது பாதுகாப்பு துறைக்கு எதிர்பார்த்த அளவிற்கு நிதிகளை ஒதுக்கவில்லை என்று குறை கூறி வந்தாலும் சர்வதேச அளவில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த திங்க் தாங்க் வெளியிட்ட அறிக்கையின் படி இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளிப் பாதுகாப்பு துறைக்காகப் பட்ஜெட் ஒதுக்கியதில் இந்திய அரசு 5வது இடத்தினைப் பிடித்துள்ளது.
இந்தியா
பாதுகாப்புத் துறைக்குப் பட்ஜெட் ஒதுக்குவதில் 5 வது இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளை 2016-ம் ஆண்டுச் செலவு செய்த 51.1 பில்லியன் டாலர் மதிப்பினை விட 2017-ம் ஆண்டு இந்தியா கூடுதலாக 52.5 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
இங்கிலாந்து
மறுபக்கம் இங்கிலாந்து 2016-ம் ஆண்டு 52.5 பில்லியன் செலவு செய்து இருந்ததாகவும் 2017-ம் ஆண்டு 50.7 பில்லியன் டாலர் வரை மட்டுமே செலவு செய்துள்ளது.
அமெரிக்கா
பாதுகாப்புத் துறைக்குப் பட்ஜெட் ஒதுக்குவதில் முதல் இடத்தினைப் பிடித்துள்ள அமெரிக்கா 150.5 பில்லியன் டாலரினை ஒதுக்கியுள்ளது. இந்தியா தற்போது வரை தங்களது இராணுவத்தினைப் புதுமைபடுத்த அதிகச் செலவு செய்து வருகிறது.
சீனா
2016-ம் ஆண்டினை விடச் சீன அரசு கூடுதலாக 25 சதவீதத்தினைப் பாதுகாப்பு துறைக்குச் செலவு செய்து இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது. அதே நேரம் இந்தியா 2.4 சதவீதம் மட்டுமே கூடுதலாகப் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.
சீனா - இந்தியா இராணுவம்
இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீன இராணுவத்தில் 6,00,000 நபர்கள் அதிகமாக உள்ளனர், 1,200 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 785 மட்டுமே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவை விடக் கூடுதலாக 55 போர்க்கப்பல்கள் சீனாவிடம் உள்ளது.
சவுதி அரேபியா
பாதுகாப்புத் துறைக்கு 76.7 பில்லியன் டாலரினை ஒதுக்கி பதுகாப்பு துறைக்கு அதிகம் பணம் ஒதுக்குவதில் மூன்றாம் இடத்தினைச் சவுதி அரேபியா பிடித்துள்ளது.
ரஷ்யா
பாதுகாப்புத் துறைக்காக 61.2 பில்லியன் டாலர் செலவு செய்ததுடன் 4வது இடத்தினை ரஷ்யா பிடித்துள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications