மார்ச் 1 முதல் ரயில் பட்டிகளில் முன்பதிவுக்கான சார்ட் ஒட்டப்படாது.. ஏன்?

ரயில்வே அமைச்சகம் மண்டல இரயில்வே அலுவலகங்களிடம் 2018 மார்ச் 1 முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு டிக்கெட்ற்கான சார்ட்டினை 6 மாதங்களுக்கு ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவானது சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அமலுக்கு வர இருக்கிறது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

முக்கிய ரயில் நிலையங்கள்

முக்கிய ரயில் நிலையங்கள்

ரயில் பெட்டிகளில் முன்பதிவு டிக்கெட்ற்கான சார்ட் குறித்துத் தமிழ் குட்ர்டிட்டர்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவலின் படி A1, A மற்றும் B பிரிவு ரயில் நிலையங்களில் இந்தப் புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

அறிவிப்புப் பலகை

அறிவிப்புப் பலகை

டிக்கெட் முன்பதிவு சார்ட்டானது ரயில் நிலை அறிவிப்புப் பலகைகளில் எப்போதும் போலக் கிடைக்கும். முக்கிய ரயில் நிலையங்களில் மின்னணு சார்ட் டிஸ்ப்ளே அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகின்றனர்.

சோதனை

சோதனை

புது டெல்லி, ஹசாரத், நிசாமுதின், மும்பை செண்ட்ரல், சென்னை செண்ட்ரல், ஹவுரா மற்றும் சியல்டா ரயில் நிலையங்களில் ஏற்கனவே இந்த முறை கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை முயற்சியில் உள்ள நிலையில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களிலும் இனி முன்பதிவு சார்ட்டுகள் இருக்காது.

உத்தரவு

உத்தரவு

புதிய உத்தரவானது அனைத்து முக்கிய ரயில் நிலைகளுக்கு 2018 பிப்ரவரி 13-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

மாற்று வழி

மாற்று வழி

அதே போன்று அனைத்து ரயில் நிலயங்களிலும் எலக்ட்ரானிக் டிஸ்பிளே முறையாக இயங்க வேண்டும் என்றும் இல்லை என்றால் உடனடியாகச் சார்ட்டுகள் அச்சிடப்பட்டி ஒட்டப்பட வேண்டும் ரயில்வே அமைச்சக உத்தரவிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+