87,000 நபர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் 64,000 பெருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது: அறிக்கை
விவசாயம் அல்லாது வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பது கடந்த சில காலாண்டுகளாக மத்திய அரசுக்குப் பெறும் தலைவலியாக மாறியுள்ள நிலையில் சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 முக்கியத் துறைகளில் 64,000 நபர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
முக்கியமாக இதில் கவலைப்பட வேண்டியது என்னவென்றால் அதே காலாண்டில் உற்பத்தித் துறையில் மட்டும் 87,000 நபர்கள் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். மேக் இன் இந்தியா கீழ் பல நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கப்படுவதாகக் கூறி வரும் நிலையில் பெரிதாக யாருக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
அதிக வேலை வாய்ப்புக் கிடைத்த துறைகள்
தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ம் ஆண்டிற்கான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 1.3 லட்சம் வேலை வாய்ப்பினை கல்வி துறையிலும், மருத்துவத் துறையில் பெற்று இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதிக வேலை வாய்ப்பினை இழந்த துறைகள்
அதே நேரம் பிற முக்கியத் துறைகளான உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஐடி / பிபிஓ துறைகளில் 66,000 நபர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளார்கள்.
எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைத்தது?
2017-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை கல்வி துறை தான் அதிகபட்சமாக 99,000 வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. மருத்துவத் துறையில் 31,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று 2016 ஏப்ரல் முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.
2016
2016 ஏப்ரல் வரை 4.8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அதில் 1.7 லட்சம் நபர்கள் கல்வி துறையிலும், 1 லட்சம் நபர்கள் மருத்துவத் துறையிலும் பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது 2.3% வேலை வாய்ப்பு வளர்ச்சி கடந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மட்டும் என்று பார்த்தால் 1.8 சதவீதம் வளர்ச்சி கிட்டியுள்ளது.
உற்பத்தித் துறை
என்ன தான் மேக் இந்தியா மீது இந்திய அரசு அதிகக் கவனம் செலுத்தி வந்தாலும் உற்பத்தித் துறையினைப் பெருத்தவரையில் 1 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினைக் கூடப் பெறவில்லை என்கின்றனர்.
பெண்கள்
கல்வி மற்றும் மருத்துவத் துறையில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்ட நிலையில் ஆண்களை விடப் பெண்களுக்குத் தான் அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதாவது 64,000 புதிய வேலை வாய்ப்புகளில் 51,000 பெண்களும், 13,000 ஆண்களும் பெற்று பயன்பெற்றுள்ளனர்.
மேக் இன் இந்தியா
மேக் இன் இந்தியா கீழ் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை விட வெலை இழப்பே அதிகம் உள்ளது என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன. இதற்கு மத்திய அரசு என்ன சொல்ல போகிறது?
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications