இந்தியரான பிரேம் வட்சா தலைமை வகிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கேரளாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக் சிரியன் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்காக 51 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் 51 சதவீதம் அளவிற்குப் பங்குகளை வாங்கும் முதல் நிறுவனம் இதுதான்.
140 ரூபாய்
பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ், கத்தோலிக் சிரியன் வங்கியின் ஒரு பங்கை 140 ரூபாய் என்ற விலையில் வாங்க உள்ளதாக இவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பேர்பேக்ஸ் செய்ய உள்ளது.
இறுதி ஒப்புதல்
12,000 கோடி ரூபாய் முதலீட்டை முழுமையாகப் பங்குகளைக் கைப்பற்றுதலின் வாயிலாகவே செய்ய உள்ளதால், இந்த முடிவிற்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல்களுக்காக இரு தரப்பும் காத்துக்கொண்டு இருக்கிறது.
குறைவான மதிப்பு
முதலில் 140 ரூபாய் என்ற மதிப்பு மிகவும் குறைவானது என வங்கி நிர்வாகத்தால் பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் கோரிக்கை வைக்கப்பட்டாலும், விலை அளவுகளில் எவ்விதமான மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்படவில்லை.