இந்திய பத்திரங்களை வாங்க ஆள் இல்லை.. மோடிக்கு வந்த புதிய பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தையை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்திய முதலீட்டுப் பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது நாட்டின் பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

பத்திர விற்பனை

பத்திர விற்பனை

2018ஆம் ஆண்டில் பொத்துறை வங்கிகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 470 கோடி ரூபாய் அளவிலான பத்திரங்களை விற்று வருகிறது. இந்த அதீத விற்பனைக்கு முக்கியக் காரணம் முக்கியமான துறைகளில் வங்கிகள் முதலீடு லாபத்தைத் தாண்டி நஷ்டத்தின் அளவுகளை அதிகமாகச் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகவே தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

 

முதலீடு

முதலீடு

கடந்த வருடம் சராசரியாக ஒரு நாளுக்குக் கடன் பத்திர சந்தையில் சுமார் 36.8 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வந்தது, 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 300 கோடி ரூபாயாக இருந்தது.

ஆனால் தற்போது முதலீட்டு நிலை முழுமையாக மாறியுள்ளது.

 

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

தனியார் முதலீட்டாளர்களை விடப் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யப்படுபவை. ஆனால் தற்போதைய சந்தையில் முக்கியத் துறைகள் அனைத்தும் சரிவை சந்திக்கும் காரணத்தால் நஷ்டத்தின் அளவுகள் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி மோடி அரசு அறிவித்த புதிய பத்திர விற்பனையில் வங்கிகள் பங்கெடுப்பதிலும் கடினமாகும். தற்போதைய பத்திர விற்பனைக்கு இதுவும் ஒரு காரணம்.

மாநில பத்திரங்கள்

மாநில பத்திரங்கள்

தற்போது வங்கிகள் பெடரல் பத்திரங்களை விட மாநில அரசுகள் வெளியிடு பத்திரத்தின் மீது அதிகளவிலான ஆர்வத்தைக் கொண்டுள்ளது. பேன் இந்தியா வளர்ச்சியைக் காட்டிலும் தற்போது சில மாநிலங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதே இந்த மன மாற்றத்திற்கு முக்கியக் காரணம்.

மொத்த வர்த்தகம்

மொத்த வர்த்தகம்

2017ஆம் ஆண்டில் மத்திய வங்கி வர்த்தகத் தளத்தில் சராசரியாகத் தினசரி வர்த்தகத்தின் அளவு 38,500 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், 2018ஆம் ஆண்டில் இதன் அளவு 30,700 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

நாட்டின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அதீத கச்சா எண்ணெய் விலை காரணமாகக் கடந்த 6 மாதத்தில் தொடர்ந்து பத்திரங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

விமானத் தொழிற்சாலை

விமானத் தொழிற்சாலை

<strong>விரைவில் இந்தியாவின் முதல் விமானத் தொழிற்சாலை மகாராஷ்டிராவில் துவங்க இருக்கிறது..! </strong>விரைவில் இந்தியாவின் முதல் விமானத் தொழிற்சாலை மகாராஷ்டிராவில் துவங்க இருக்கிறது..!

ஏர்செல்

ஏர்செல்

<strong>5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!</strong>5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!

 நீராவ் மோடி கடிதம்..!

நீராவ் மோடி கடிதம்..!

<strong>சம்பளம் தர முடியாது.. வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.. நீராவ் மோடி கடிதம்..!</strong>சம்பளம் தர முடியாது.. வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.. நீராவ் மோடி கடிதம்..!

மொபைல் எண்

மொபைல் எண்

<strong>13 இலக்க மொபைல் எண் மாற்றம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி..!</strong>13 இலக்க மொபைல் எண் மாற்றம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Trouble for Modi's plan: No buyers for Indian bonds

Big Trouble for Modi's plan: No buyers for Indian bonds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X