11,400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள நீராவ் மோடியின் நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பளம் பாக்கி உள்ளது என்று பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நீராவ் மோடியின் மாமா மெஹுல் சவுக்ஷியும் கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பள பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விளம்பரங்கள்
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நக்ஷத்ரா மற்றும் கிலி ஆகிய இரண்டு விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நடித்து இருந்தனர்.
பிபாஷா பாசு & கங்கனா ரனாவத்
2008-ம் ஆண்டுக் கிலிஸ் விளம்பர தூதராகப் பிபாஷா பாசு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கங்கனா ரனாவத்தும் ஒப்பந்த காலம் முடிந்தும் தான் நடித்த விளம்பரத்தினைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
மோசடி
சென்ற வாரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 11,400 கோடி ரூபாய் மோசடி குறித்து விவரங்கள் வெளிவர அதில் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனர் மெஹுல் சவுக்ஷிக்கும் தொடர்பு இருப்பதாகச் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனை
பஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்துள்ள புகாரினை அடுத்து நாடு முழுவதும் நீராவ் மோடி மற்றும் அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்துள்ளனர்.
பிற முக்கிய விளம்பர தூதர்கள்
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 2004-ம் ஆண்டின் விளம்பர தூதரக ஐஷ்வர்யா ராயும், 2008-ம் ஆண்டுக் காட்ரீனா கைப்பும் இருந்துள்ளனர்.