தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் முதலில் தமிழகத்தில் துவங்கப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களால் அண்டை மாநிலமான ஆந்திராவில் விரவில் துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 3,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
முதலீடு
இந்தியாவில் புதியதாகத் தங்களது தயாரிப்பு ஆலையினைத் துவங்க உள்ள கியா மொட்டாஸ் 1 பில்லியன் டாலரினை இதற்காக முதலீடு செய்ய உள்ளது.
தொழிற்சாலை
கியா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை 23 மில்லியன் சதுர அடி நில பரப்பில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறனுடன் அமைய இருக்கிறது.
வேலை வாய்ப்பு
புதிதாகக் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரிய இந்தியாவில் இருந்து 3,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகக் கியோ மொட்டார்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆந்திர அரசு
ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது குறித்து ஆந்திர அரசுடன் விவாதித்து வருவதாகவும், அரசு மற்றும் கியா மோட்டாஸ் நிறுவனம் என இரண்டு தரப்பும் இணைந்து அருகில் உள்ள உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சிறப்பம்சம்
மிகப் பெரிய கார் என்பதற்கும் கூடுதலான சிறப்பம்சங்கள் கொண்ட கார்களை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாகவும், இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மிகப் பெரிய மாற்றத்தினை உருவாக்குவோம் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹான் வூ பார்க் அன்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தினை இந்தியாவில் கட்டமைக்கும் பணியானது 2019-ம் ஆண்டின் முதற் காலாண்டிற்குள் முடிவடையும் என்றும் முதலில் எஸ்பி கான்சப்ட் மற்றும் எஸ்யூவி என இரண்டு மாடல் கார்களை 2019-ம் ஆண்டு அரையாண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications