பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தொடர்புடையதாக நீரவ் மோடியின் மாமா மோஹூல் சோக்ஷிக்குத் தொடர்புடையதாக அவரது சொத்துக்களிலும் சோதனை நடத்தப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனால் மோஹூல் சோக்ஷியின் சொத்துக்களும், நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு இருப்பதால் நீரவ் மோடி போன்று ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியவில்லை என்றும் வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
மின்னஞ்சல்
இந்த மின்னஞ்சல் ஊழியர்களைக் கருத்தில் கொண்டு எழுதியுள்ளதாகவும் மோசடி வழக்கில் சமந்தம் இல்லாமல் எண்ணையும் தொடர்புபடுத்தித் தனக்கும் நம்முடைய நிறுவனத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சம்பளம் அளிக்க முடியவில்லை
நீங்கள் இந்த மாதம் கடினபட்டு வேலை பார்த்து இருப்பீர்கள், உங்களுக்கு நிறையத் தேவைகளும் இருக்கும். ஆனால் தான் தற்போது இருக்கும் நிலையில் சம்பளம் அளிக்க முடியவில்லை. இந்த மாதத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்ததாகவும் ஆனால் முடியவில்லை. எனவே உங்களை இனிமேலும் சிரமப்படுத்த விரும்பவில்லை வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
லேப்டாப் மற்றும் மொபைல் போன்
நிறுவனத்தில் இருந்து ஊழியர்களுக்கு லேப்டாப் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சம்பளத்தினைப் பெரும் போது அதனைத் திருப்பி அளித்தால் போதுமனது.
அனுபவ கடிதம்
ஊழியர்களுக்கான அனுபவ கடிதம் போன்றவை மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் அளித்து உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நீராவ் மோடி
முன்பு இதே போன்ற ஒரு கடிதத்தினை நீரவ் மோடியும் தனது ஊழியர்களுக்குக் கடிதம் எழுதி அனைத்துப் பிரச்சனைகளையும் முடித்துக்கொண்டு தான் வெளி வருவேன் என்றும் வங்கி கணக்கை அணுக அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் எனவே வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் விரைவில் சம்பளம் அளிப்பேன், மீண்டும் முடிந்தால் சேர்ந்து பணிபுரியாலாம் என்று தெரிவித்து இருந்தார்.