வங்கி கணக்கு, மொபைல் எண் போன்ற பலதரப்பட்ட சேவைகளில் 2018 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து வியாழக்கிழமை விசாரித்த தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அந்த மனுவை நிராகரித்துவிட்டனர்.
விசாரணை
எனினும் ஆதார் சட்டம் 2016 குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான தீர்ப்பு வரும் போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்து முடிவுகளுக்குத் தீர்வு கான நீதிமன்றம் வழிவகைச் செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்தரப்பினர்
ஆதார் கார்டு சேவையினை எதிர்த்து வருபவர்கள் ஆதார் சட்டம் 2016-ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆதார் விவரங்கள் மூன்றாம் நபர்களுக்கு அளிக்கப்படதாகவும், இதனை வைத்து வியாபாரம் செய்து வருவதாக எதிர்தரப்பினர் தங்களது வாதங்களை வைத்து வருகின்றனர். அதற்கு நேர்மாறாக இந்திய தனிநபர் அடையாளை ஆணையம் அவ்வளவு எளிதாக ஆதார் விவரங்களை யாராலும் திருடி விற்று மோசடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை
மேலும் ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும், தனியார் வசம் ஆதார் சேவைகளை அளிக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பினை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
காலக்கெடு
உச்ச நீதிமன்றம் தற்போது ஆதார் எண் இணைப்புகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்காததால் 2018 மார்ச் 31-க்குள் வங்கி கணக்கு, இன்சூரன்ஸ், மொபைல் எண் போன்ற சேவைகளைத் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேலை இணைக்கவில்லை என்றால் இந்தச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications