இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் வரையிலான 3ம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்ந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு 5.7 சதவீதம் வரை சரிந்த ஜிடிபி உயர்ந்துள்ளதால் மோடி அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
சீனாவின் 6.8 சதவீதம் அல்லது இணையான ஜிடிபி வளர்ச்சியை இந்தியா பெறுமா என்று எதிர்பார்த்த நிலையில் 7.2 சதவீதம் பெற்று வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடு என்பதை இந்தியா நிருபித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த முக்கியத் துறைகள்
விவசாயம், காடு மற்றும் மீன்பிடித்தல் துறை 3 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி துறை 3 சதவீதமும், உற்பத்தித் துறை 5.1 சதவீதமும், கட்டுமான துறை 4.3 சதவீதமும் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.
2015
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6.8 சதவீதமாக இருந்த ஜிடிபி ஜூலை மாதம் 7.6 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 8.4 சதவீதமாக இருந்தது.
2016
பின்னர் 2016 ஜனவரியில் 7.4 சதவீதமாகச் சரிந்து இருந்தது. அதிகபட்சமாக ஜூன் மாதம் 9.2 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 7.9 சதவீதமாகவும், டிசம்பர் மாதம் 7.5 சதவீதமாகவும் இருந்தது.
2017
பணமதிப்பிழக்கம் செய்த பிறகு தொடர்ந்து சரிந்து வந்த இந்தியாவின் ஜிடிபி 2017 ஜூலை மாதம் 5.7 சதவீதமாக இருந்தது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நிதானமாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ஜிடிபி 6.5 சதவீதமாக இருந்தது. தற்போது ஜனவரி மாதம் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.