கூகுள் நிறுவனத்தின் எழுச்சியானது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் அனைத்து வருவாய் சாதானைகளையும் உடைத்து எரிந்து புதிய சாதனைகளை படைக்க வைத்தது.
இந்தியாவில் பிறந்து கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர்பிச்சைக்கு ஆல்பாபெட்டில் போர்டு குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தாலும், நிதி சார்ந்த தகவல்கள் வந்தாலும் அதில் முடிவெடுக்கும் அதிகாராம் ஏதும் அவர்க்கு கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா?
வியாபாரம் மற்றும் கட்டமைப்பு
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் புதிதாக வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்களில் அல்ப்பாபெட் நிறுவத்தின் மொத்த வியாபரம் குறித்தும், கட்டமப்பு பற்றியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதிகாரம்
கூகுள் நிறுவனம் ஆல்பாபெட்டின் துணை நிறுவனம் என்றாலும் சுந்தர் பிச்சைக்கு தனியாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் வாராந்திர மற்றும் காலாண்டு அறிக்கையுடன் தயாரிப்பு பிரிவுகள் குறித்து சுந்தர் பிச்சைக்கு தெரிவிக்கப்படும்.
இந்த அறிக்கையில் யூடியூப், விளம்பரம், வன் பொருள், செயல்பாட்டு முடிவுகள், முதலீட்டு செலவு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இருக்கும்.
அறிக்கை
ஆனால் சுந்தர் பிச்சை பெறுவது போன்று வாராந்திர மற்றும் காலாண்டு அறிக்கையினை ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லேரி பேஜ் மற்றும் இணை நிறுவனர் செர்ஜி பிரின் உள்ளிட்டோருக்கு அனுப்புவதில்லை.
கூகுள்
லேரி பேஜ் ஒப்புதல் இல்லாமல் சுந்தர் பிச்சையால் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள், நிறுவனங்களை கையகப்படுத்துல், இணைதல் போன்றவற்றுக்கு ஒப்புக்கொள்ள அனுமதி உண்டு.
சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் யூடியூப் மற்றும் கிளவுட் சேவைகளுக்கு தனித்தனியாக தலைனை நிர்வாக அதிகாரிகள் இருந்தாலும் சுந்தர் பிச்சைக்கு மட்டுமே லேரி பேஜ் உடன் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க மற்றும் தொடர்பில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லேரி பேஜ்
லேரி பேஜ் தான் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் பிற பீட்டா சிஈஓ-க்களுக்கான சம்பளம் குறித்து முடிவு செய்வார். அனால் பிற நிர்வாகிகளுக்கு இவரால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.