பொதுத் துறை வங்கிகளின் செலவுகளைக் குறைத்தல் மற்றும் வங்கி சேவையினை மெருகேற்ற 35 வெளிநாட்டுச் செயல்பாடுகளை மூட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதி சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு வங்கி சேவைகளைப் பாதிக்காத படி மத்திய அரசு 35 செயல்பாடுகளை மூட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இணைவு
அது மட்டும் இல்லாமல் வங்கி கிளைகள், கூட்டுச் செயல்பாடுகள், துணை நிறுவனங்கள் என மீதம் உள்ள 69 செயல்பாடுகளிலும் இணைத்தல் பணிகளைச் செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
சீர்திருத்தச் செயல்பாட்டில் ஒரு பகுதியாக, அரசுக்குச் சொந்தமான வங்கிகளின் 216 வெளிநாட்டு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல்
வெளிநாட்டு வங்கி கிளைகளில் எங்கு எல்லாம் லாபம் இல்லையோ அங்கு உள்ள பொதுத் துறை வங்கி கிளைகள் எல்லாம் மூடப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை இணைத்து ஒரே இடத்தில் சேவை அளிப்பது என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தானால் செலவுகள் குறையும் சேவை மெருகேறும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
நீரவ் மோடி
மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை ஏற்கனவே இத்துப்பொன்று சீரமைக்க முடிவு செய்து இருந்த நிலையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி செய்த எல்ஓசி கடன் உத்திர வாத மோசடியினை அடுத்து வேகமாக இதற்கான பணிகளில் இயங்கி வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.