வல்லரசு நாடுகளாகத் திகழும் சீனா, அமெரிக்கா மத்தியில் வர்த்தகப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான நிலைக்கு ஆரம்பக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் எனப் பல தரப்புகள் கூறி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்..?
இந்தியா
இந்தியா ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்ரு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக உள்ளது.
ஆனால் ஒரு பிரச்சனை..?!
இருமுனையிலும் பிரச்சனை
அமெரிக்கா சீனாவிற்கும், சீனா அமெரிக்காவிற்கும் வர்த்தக நெருக்கடி உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்தியா யார் பக்கம் சாய வேண்டும் என்பதில் மிகவும் கவனமான முடிவை எடுக்க வேண்டும்.
வர்த்தக வாய்ப்புகள் பார்க்கும் போதும் யார் பக்கமும் சாயாமல் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டு இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். இதன் வாயிலாகவே அதிகளவிலான வர்த்தக வாய்ப்பை இந்தியா பெறும்.
நட்புறவு..
இந்தியா எந்த நிலையில் அமெரிக்கா உடனான நட்புறவை கைவிட முடியாது.
ஆனால் அமெரிக்காவை எதிர்க்கும் நாட்டுகளின் கூட்டணி பெரிதாகவும், வலிமையாக இருக்கும் பட்சத்தில் இந்தியா இவர்களுடன் சேரலாம். இல்லையெனில் அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்தியா உள்ளது.
2020இல் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இதுவரை வகுத்த திட்டங்கள், எடுத்த முடிவுகள் அதிகளவில் பலன் அளிக்கவில்லை, இதனால் அமெரிக்கப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2020இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தல் டிரம்ப் தோல்வியைச் சந்திப்பார் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
இறுதி நிலைப்பாடு
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா சீனாவையோ அல்லது அமெரிக்காவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ எதிர்க்க முடியாது. வலிமையான யானைக்கு (கூட்டணி நாடுகள்) பின்னால் இருப்பதே தற்போதைய நிலைக்குப் பாதுகாப்பு.
சண்டை முற்றியது..
மலை மலையாய்
ஓரம்கட்டப்பட்ட பில..." data-gal-src="http:///img/600x100/2018/03/billgates525-1520226962.jpg">பில் கேட்ஸ்..