ஹாங்காங்-இல் மறைந்து இருக்கும் நீரவ் மோடி.. ரகசிய தகவல் வெளியானது..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,600 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டு வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி எந்த நாட்டில் மறைந்துள்ளார் எனத் தெளிவான தகவல்களைக் கிடைக்காத நிலையில், அமெரிக்காவும் அவரைக் கண்டுப்பிடக்க உதவ முடியாது என்ற வகையில் பதில் அளித்தது.

இந்நிலையில் நீரவ் மோடி அமெரிக்காவில் தான் இருக்கிறார் என நம்பப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக ஹாங்காங்-இல் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

வழக்கும் உத்தரவும்..

வழக்கும் உத்தரவும்..

இந்த மோசடி வெளியான பின்பு வெளிநாட்டின் மறைந்திருக்கும் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி ஆகியாரை இந்தியாவிற்குக் கொண்டு வரும் நோக்கில் அமலாக்கத் துறை, பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுமட்டு் அல்லாமல் சனிக்கிழமை நீரவ் மோடி மீது ஜாமீனில் வெளிவராத வகையில் கைது ஆணையை வழங்கியுள்ளது.

 

சமன்

சமன்

சிபிஐ அமைப்பு நீரவ் மோடிக்கு அளித்த பல சமன்களுக்கு இதுவரை சரியாகப் பதில் அளிக்காத நிலையில் சிறப்பு விசாரணைக் குழு ஜாமீனில் வெளிவராத வகையில் கைது ஆணையைக் கோரியுள்ளது.

 பிஸி

பிஸி

சமீபத்தில் சிபிஐ அமைப்பு நீரவ் மோடிக்கு அளித்த சமனில் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், தனது வேலை இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலைக்குத் தான் வர முடியாது எனவும் அவர் பதில் அளித்துள்ளார்.

இந்தியா

இந்தியா

ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை மூலம் அமலாக்கத் துறை நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரை இந்தியாவிற்கு அழைத்து வர வாய்ப்பு அதிகரிக்கும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

 ஹாங்காங்

ஹாங்காங்

தற்போது நீரவ் மோடி ஹாங்காங்-இல் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசுடனோ அல்லது நேரடியாகக் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் எனத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+