நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், சென்னை வேளச்சேரி கிளையில் கார் வாங்குவதற்காகச் சுமார் 3.3 கோடி ரூபாய் கடனை 13 பேர் பெற்றுள்ளது.
இந்தப் பணத்தை வைத்துக் கார் வாங்காமல் அருவா சண்ட என்னும் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் மார்ச் 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன கடன்
அருவா சண்ட படத்தின் ஹீரோ மற்றும் கபடி வீரர் ராஜா உட்படச் சுமார் 13 பேர், வேளச்சேரி வங்கி கிளையின் வாகன கடன் ஆலோசகரான சித்ரா தலைமையில் தேவையான ஆவணங்கள், KYC படிவம் ஆகியவற்றைக் கொடுத்து சுமார் 3.30 கோடி ரூபாய் அளவிலான கடனுக்கு ஒப்புதல் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆவணங்கள்
இந்த வங்கி கிளையில் சித்ராவிற்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைத் தாண்டி, சில போலி மற்றும் சந்தேகத்திற்குரிய ஆவணங்களைக் கொடுத்து கடனுக்கு ஒப்புதல் பெற்றுள்ளார்.
வங்கி பணப் பரிமாற்றம்..
சித்ரா அவர்களுக்கு இந்த வங்கி கிளையில் நல்ல மதிப்பு இருக்கும் காரணத்தால் பல வங்கி அதிகாரிகளின் கம்பியூட்டர்களையும் பயன்படுத்த உரிமை கொண்டு உள்ளார்.
இத்தகைய சூழ்நிலையை லாபகமாகப் பயன்படுத்திய சித்ரா, வங்கி அதிகாரிகளின் யுசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு உடன் 13 பேருக்கு ஒப்புதல் பெற்ற கடன் தொகையை நேரடியாக அவர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
முறைகேடு
இந்நிலையில் வேளச்சேரி வங்கி கிளையின் மேலாளர் கடன் ஒப்புதலில் முறைகேடுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான கடன்கள் அனைத்தும் சித்ரா மூலம் ஒப்புதல் பெற்றுள்ளார்.
தற்போது அவர் செய்த அனைத்துக் குற்றங்களும் நிருபணமாகியுள்ளது.
பணம்
இப்படி வாகன கடன் தொகையை நேரடியாகப் பணமாகப் பெற்ற 13 பேர், கார் வாங்காமல் அருவா சண்ட திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
வழக்கு
சித்ரா மீதான குற்றத்தை விசாரிக்கும் போது இந்த 13 பேர் செய்த மோசடி வெளியாகி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
தடை
சென்னை உயர் நீதிமன்றத்தில் வங்கி கொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வெயிட் ஸ்கிரீன் புரொடெக்ஷன்ஸ் தயாரித்த அருவா சண்ட திரைப்படத்தை, இந்நிறுவன தலைவர் ராஜா வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications