சர்வதேச சந்தையில் பொருளாதார நெருக்கடி உருவான 2008ஆம் ஆண்டில் உலகின் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் சிக்கி மாட்டிக்கொண்ட நிலையில், இந்தியா மட்டும் இதில் தப்பித்துக்கொண்டது.
இது உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது பொறாமை உருவாகவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. ஆனால் இன்று..?
2008 நிதி நெருக்கடி
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்ததற்கு முக்கியமான காரணம், முன்னணி பொருளாதார நாடாக இந்தியா இருந்தாலும் இந்திய வங்கிகளின் அதன் வராக்கடன் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. இது மிகப்பெரிய வலிமையாக இந்தியாவிற்கு அமைந்தது.
முதலீடு
இதன் பின் இந்திய வங்கிகளிலும், பங்குச்சந்தையிலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர். இன்றளவு பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீட்டுத் தளமாக இருப்பது வங்கித்துறை பங்குகள்.
ஜி20 நாடுகள்
இந்திய வங்கிகளில் 2009ஆம் நிலவரத்தின் படி வராக் கடன், செயற்படா சொத்துக்கள் அளவு மொத்த கடனில் வெறும் 2.21 சதவீதமாக மட்டுமே இருந்தது. இது ஜி20 நாடுகள் மத்தியில் மிகவும் குறைவான அளவு.
இதுவே 2008ஆம் ஆண்டு நிதிநெருக்கடியில் இருந்து தப்பிக்க முக்கியக் காரணமாக இருந்தது.
2017 நிலவரம்
இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் இந்திய வங்கிகளில் வராக் கடன் அளவு மொத்த கடனில் 9.73 சதவீதமாக உள்ளது. இது ஜி20 நாடுகள் மத்தியில் இத்தாலி, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக வராக் கடனை வைத்துள்ளது.
மட்டமான கணக்கீடு
இந்த நிலைக்கு முக்கியமான காரணம் வங்கிகளின் மட்டமான நிர்வாகம் மற்றும் மோசமான கணக்கீட்டு முறைகளும், முறைகேடுகளும் தான்.
வெடிக்கும்..
இந்தப் பிரச்சனை இப்போது தான் வெடிக்கத் துவங்கியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் போதும் மிகப்பெரியதாக வெடிக்கும். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவாலானது போல், இந்தியாவிலும் திவால் ஆகலாம்.
இதனை முன்கூட்டியே கவனித்துக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் கண்டிப்பாகப் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications