இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளமான பேடிஎம் மால் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகவும், புதிய சேவைகள் அறிமுகத்திற்காகவும் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தில் முதலீடு செய்யச் சீனா, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறது.
அலிபாபா
சீன ஈகாமர்ஸ் சந்தையின் முடிசூடா மன்னாக விளங்கும் அலிபாபா மற்றும் அதன் பேமென்ட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்து. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அலிபாபா கையில் இருக்கும் பங்கின் மதிப்பு மட்டும் சுமார் 13,000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
சாப்ட்பேங்க்
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னணி முதலீட்டு மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான சாப்ட்பேங்க் தற்போது பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது,
இதன் மூலம் பேடிஎம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி ரூபாய்
இதோடு பேடிஎம், சிங்கப்பூர் தேமாஸ்க் ஹோல்டிங்க்ஸ் மற்றும் சீனாழின் பிரிமாவெரா கேப்பிடல் குரூப் ஆகிய நிறுவனங்களிடம் கூடுதலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
போட்டி
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சேவை சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தைக் காட்டி வருகிறது.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
சமீபத்தில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் புதிய முதலீட்டை ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது பேடிஎம் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
3வது நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட்பேங்க்-இன் 3000 கோடி ரூபாய் முதலீடு இந்த மாதத்தின் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆன்லைன் சந்தையில் மட்டும் சாப்ட்பேங்க் சுமார் 3 நிறுவனங்களில் இதுவரை முதலீடு செய்துள்ளது. 2014இல் ஸ்னாப்டீல், 2017இல் பிளிப்கார்ட், தற்போது பேடிஎம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications