பொது துறை வங்கிகளில் அதிக வாரா கடன் வைத்துள்ளது அதானி தான்.. சுப்பிரமணியன் சுவாமி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது துறை வங்கிகளில் அதிக வாரா கடன் வைத்து இருப்பதில் கவுதம் அதானிக்கு தான் முதல் இடம் என்று செவ்வாய்க்கிழமை பாஜக-ஐ சேர்ந்த மூத்த அமைச்சரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடிக்கு நெருக்காமானவர் என்று அதானிக்கு அதிகப்படியான கடனை தொடர்ந்து அளித்து வருவதால் அதனை முறையாகக் கணக்கில் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் அந்தப் பணத்தினை மீட்க நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் டிவிட் போட்டுள்ளார்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமம் மின்சாரம், டிரான்ஸ்மிஷன், ரியல் எஸ்டேட் மற்றும் கமாடிட்டி எனப் பல வணிகங்களைச் செய்து வரும் நிலையில் அனைத்து நிறுவனங்கள் மீதும் 1000 கோடிகளுக்கும் அதிகமாகக் கடன் பெற்றுள்ளார்.

கடன்

கடன்

ப்ளும்பெர்க் தளத்தில் உள்ள தரவுகளின் படி அதானி பவர் நிறுவனத்தின் கீழ் 47,609.43 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷ்ன நிறுவனத்தின் மீது 8,356.07 கோடியும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீது 22,424.44 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது 20,791.15 கோடி ரூபாயும் பொதுத் துறை வங்கிகளில் கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 சொத்து மதிப்பு
 

சொத்து மதிப்பு

கடந்த சில வருடங்களாக மிக வேகமாக வளர்ந்து வரும் அதானியின் சொத்து மதிப்பு 2017-ம் ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும் இந்தியாவின் டாப் 10 பில்லியனர்களில் இவரும் ஒருவர் என்று ஃபோர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

பாஜக கட்சியில் இருந்தே ஒருவர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி தான் அதிகளவில் வாரா கடன் வைத்துள்ளதாகவும் அதனை முறையாகக் கணக்கில் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்

மக்கள்

சுப்பிரமணியன் சுவாமியின் டிவிட்டுகளைப் பார்த்தவர்கள் அடுத்த நீரவ் மோடி அதானியாக இருக்கமோ, வங்கிகளில் உள்ள நமது பணம் பாதுகாப்பாக உள்ளதா, இவரும் வெளிநாட்டிற்குச் சென்றால் வங்கிகள் கடன் மீதான வட்டியை மீண்டும் உயர்த்திவிடுமோ அல்லது பிற வங்கி சேவைகளுக்கான கட்டணத்தினை உயர்த்தி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subramanian Swamy says Gautam Adani have NPA in PSUs

Subramanian Swamy says Gautam Adani have NPA in PSUs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X