பீருக்கு பதிலாகப் புதிய மதுபானம்.. கோகோ கோலா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்பானங்களைத் தயாரித்துச் சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்த கோகோ கோலா நிறுவனம் 130 ஆண்டுகள் பழமையான ஒரு நிறுவனமாக உள்ளது. தற்போது இதுவரை ஈடுபடாத மதுபான உற்பத்தி துறையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.

மதுபான சந்தையானது ஜப்பானில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கோகோ கோலா நிறுவனம் அரிசி, உருளைக்கிழங்கு அல்லது பார்லியில் இருந்து தயாரிக்கப்படும் மதுபான வகையினை அறிமுகம் செய்ய உள்ளது.

ஷூ-ஹை

ஷூ-ஹை

ஷூ-ஹை என்ற பெயரிடப்பட்ட இந்த மது பானம் சோச்சு ஹைபாலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் 3 முதல் 8 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும் பெண்களுக்கு ஏற்றப் பாணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

மதுபானம் குறித்து ஜப்பான் ஊட்டங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடம் கோகோ கோலாவின் ஜப்பான் வணிகப் பிரிவின் தலைவர் ஜோர்ஜ் கார்டுனோ இது குறித்து இணையதளத்தில் சோதனை முயற்சியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், எங்களது வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறைந்த அளவில் ஆல்கஹால் உள்ள மதுபானம்

குறைந்த அளவில் ஆல்கஹால் உள்ள மதுபானம்

கோகோ கோலா நிறுவனம் இது வரை ஆல்கஹால் கலக்கப்படாத பானங்களைத் தயாரிப்பதில் தான் கவனம் செலுத்தி வந்ததாகவும், முதன் முறையாகக் குறைந்த அளவில் ஆல்கஹால் உள்ள மது பானத்தினைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது என்றும் ஜப்பானில் மட்டும் தான் இது கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 கோகோ கோலா

கோகோ கோலா

1886-ம் ஆண்டு அட்லாண்டாவில் துவங்கப்பட்ட கோகோ கோலா சோடா நிறுவனத்தின் இந்தக் குளிர்பானத்தின் செய்முறை இரகசியமாகத் தற்போது வரை காக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca Cola to launch first alcoholic drink

Coca Cola to launch first alcoholic drink
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X