செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் மீது அதிகளவிலான இறக்குமதி வரியை விதித்தது. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது சீனா என்பதால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயம் இருக்கும் நிலையில்.
இது ஐரோப்பாவிற்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே உள்ளது.
வர்த்தகம்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஐரோப்பாவிற்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் ஐரோப்பா சாதகமாக இயங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவிலான வரி விதிக்கப்படும் என்பதே இதன் உண்மையான மைய கருத்தாக உள்ளது.
பாதிப்பு
இந்த வரிவிதிப்பால் அமெரிக்கா மட்டுமல்ல வரி விதிக்கப்படும் பிற நாடுகளிலும் இருக்கும். அமெரிக்காவை போல் பிற நாடுகளும் வரி விதிக்கத் துவங்கம்.
இதனால் கனடா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற முக்கியமான நாடுகள் பாதிக்கப்படும்.
பழிக்குப் பழி
அமெரிக்காவின் இந்தச் செயலால் இந்நாட்டின் வர்த்தகக் கூட்டணி நாடுகள் அனைத்தையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பழிக்கு பழி என்ற கணக்கில் திட்டமிட்ட துவங்கியுள்ளனர்.
அச்சம்
இந்த அறிவிப்புகளால் அமெரிக்காவில் இருக்கும் சர்வதேச சந்தை நிறுவனங்களை அதிகளவிலான அச்சத்தில் உள்ளது.
யாருக்கு வெற்றி
அமெரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் பழிக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் வரியை உயர்த்தினால் யாருக்கும் லாபம் இல்லை. எல்லோரும் தோல்வியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டைன் டகார்டே தெரிவித்தார்.