2017-2018 நிதி ஆண்டு இன்னும் 21 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் 85,300 கோடி ரூபாய் வரை கூடுதலாகச் செலவு செய்ய அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்புதல் கேட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு நடப்பு அரசின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில் கிராமப்புற கட்டுமானம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் போன்ற பல முக்கியத் திட்டங்களை அறிமுகம் செய்து வாக்காளர்களைக் கவர பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
உற்பத்தி
சென்ற ஆண்டு 3.2 சதவீதமாக இருந்த மொத்த உற்பத்தியினை 3.5 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்தக் கூடுதல் செலவு 2017-2018 நிதி ஆண்டில் பெரியதாக நிதி பற்றாக்குறை ஏற்படுத்தித் தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
கூடுதல் செலவு
இந்தச் செலவில் 2017 ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்த பிறகு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அளித்த இழப்பீடான 62,700 கோடி மற்றும் ஆயுதப்படைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு 9,260 கோடி ரூபாய் ஒதுக்கியதும் அடங்கும்.
ஜிடிபி
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சீனாவின் 6.8 சதவீத ஜிஎஸ்டி-ஐ முந்திச் சென்று 7.2 சதவீத ஜிடிபி பெற்றுள்ளதாக இந்தியா பதிவு செய்துள்ளது.
மோடி மீதான விமர்சனம்
அதே நேரம் பொதுத் துறை வங்கிகளில் அதிகளவில் உள்ள வரா கடன் மற்றும் இந்திய வங்கி வரலாற்றில் இது வரை எப்போதும் நடக்காத அளவிற்குப் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற 12,700 கோடி ரூபாய் மோசடி குறித்தும் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.