இந்திய ஐடி நிறுவனங்கள் சென்ற ஆண்டு அதிகப்படியான ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு எல்லாம் ஜப்பான் அறிய வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது.
ஜப்பானில் உடனடியாக 2,00,000 இந்திய ஐடி ஊழியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவில் வேலை போயிவிடுமோ என்று பயந்துகொண்டு இருந்தவர்களுக்கும் வர பிரசாதமாக ஜப்பான் ஐடி வேலைவாய்ப்பு இருக்கப்போகிறது.
ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை
தற்போது ஜப்பானில் 9,20,000 ஐடி ஊழியர்கள் உள்ள நிலையில் உடனடியாக 2,00,000 நபர்கள் தேவைப்படுகிறது என்றும் அதனை இந்தியர்களை வைத்துச் சமாளிக்க முடிவு செய்துள்ளதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் இது 8 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் தான் ஜப்பான் நிறுவனங்கள் பிற நாடுகளுடன் வர்த்தகத்தினை மேற்கொள்ளும்.
ஹைதராபாத் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்
இந்திய - ஜப்பான் வணிகக் கூட்டணி குறித்துப் பெங்களூருவில் பேசிய மேத்தா ஜப்பான் அரசு குறிப்பாக ஹைதராபாத்தினைச் சேர்ந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல் பட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
கிரீன் கார்டு
அமெரிக்கா போன்றே ஜப்பான் அரசு அதிகத் திறன் படைத்த ஊழியர்களுக்குக் கிரீன் கார்டு அளிக்க முடிவு செய்துள்ளது. கிரீன் கார்டு பெறும் ஊழியர்கள் ஜப்பானில் நிரந்தரமாகக் குடியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழி பிரச்சனை
ஜப்பான் தற்போது தங்களது ஐடி தேவையினைச் சீனா மற்றும் வியாட்நாம் மூலம் நிறைவேற்றி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியர்கள் ஜப்பானிஸ் மொழியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே ஆகும்.
பார்மா துறை
ஐடி துறை மட்டும் இலாமல் இந்தியாவின் பார்மா துரையிலும் ஜப்பான் அதிகளவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஜப்பான் அதன் உற்பத்தி செயல்முறைகளைப் புரட்சிகரமாக்க முடிவு செய்துள்ளது.
ஜப்பான் நிறுவனங்கள்
அமெரிக்காவை விடச் சீனாவில் 30,000 ஜப்பான் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1,369 ஜப்பான் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் ஜப்பானில் 71 இந்திய நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.