ரெய்டு அண்ட் டெய்லர் பிராண்ட் ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி ஆடம்பர ஆடை நிறுவனமாக மட்டும் அல்லாமல் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன்-ஐ வைத்து இந்தியா முழுவதும் தனது ஆடை தயாரிப்புகளை விளம்பரம் செய்து வர்த்தகத்தைப் பெற்று வந்தது.
ஆனால் இப்போது ஆதீத கடன் நெருக்கடியாலும், வர்த்தகம் பெற முடியாத காரணத்தால் அதன் தாய் நிறுவனமான எஸ்.குமார்ஸ் நேஷன்வைய்டு திவாலாக அறிவிக்க நீதிமன்றம் சென்றுள்ளது.
5,000 கோடி ரூபாய் கடன்
இந்தியாவில் தற்போது ஆடம்பர மற்றும் வெளிநாட்டு ஆடை நிறுவனங்கள் அதிகளவில் வந்துள்ள நிலையில் ரெய்டு அண்ட் டெய்லர் பிராண்டுக்கான ஆதிக்கம் குறைந்துவிட்டது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் தாய் நிறுவனமான எஸ்.குமார்ஸ் சுமார் 5,000 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது.
நித்தின் காஸ்லிவால்
எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் தலைவரான நித்தின் காஸ்லிவால் கடன் பெற்ற பல வங்கிகளில் திவாலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி
எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் நிறுவனத்தின் நொடிப்பு (insolvency) நடவடிக்கையை முதல் முறையாக ஐடிபிஐ வங்கி துவங்கியது. இதன் பின் ஈடெல்விஸ் சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் ரெய்டு அண்ட் டெய்லர் இந்திய நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது.
மறுகட்டமைப்பு
தற்போது ரெய்டு அண்ட் டெய்லர் மற்றும் எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை மறுகட்டமைப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கான தீர்வு திட்டத்தை ஆய்வு செய்ய ஓரே அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தான் இயங்கி வருகிறது. வர்த்தகம் மற்றும் வர்த்தகச் சந்தை சிறப்பாக இருந்தால் எல்லோரும் கடனை திருப்பிச் செலுத்த முடியும்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் வர்த்தகச் சந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலாகி வருகிறது பல முன்னணி நிதித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications