இந்தியாவில் முன்னணி வேலைவாய்ப்புக் கன்சல்டிங் நிறுவனத்திற்குச் சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலையில் உள்ளதாகவும், மாற்று வேலைவாய்ப்புக்காக அழைத்து வருவதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
எந்தத் துறை தெரியுமா..?
பொதுத்துறை வங்கிகள்
இந்திய வங்கிகளில் தற்போது அதிளவிலான வராக்கடன், பண மோசடி ஆகியவை இருக்கும் காரணத்தால் பொதுத்துறை வங்கிகள் ஆபத்தில் உள்ளது. இதனால் வர்த்தகத்தைச் சீர்ப்படுத்த பொதுத்துறை வங்கிகள் சில வங்கி கிளைகளையும் மூடத் திட்டமிட்டு வருகிறது.
இதனால் பல வங்கி அதிகாரிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் வங்கித் துறை
இப்படிப் பொதுத்துறை வங்கிகளில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் தனியார் வங்கித்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்குத் தனியார் வங்கி அமைப்பில் அதிகளவிலான டிமான்டு இருப்பதாகவும் இந்தக் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு வேலை
தற்போது வேலைவாய்ப்புக்காக அழைத்த பல வங்கித்துறையில் அதிகளவிலான அனுபவம் பெற்று இருக்கும் நிலையில், பொதுத்துறையில் வங்கியில் வேலைவாய்ப்புக்கு அதிகளவிலான உத்திரவாதம் இருக்கும் ஆனால் தனியார் துறையில் உத்தரவாதம் இருக்காது என வருத்தும் தெரிவிப்பதாகவும் அவர்கள் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசடி
தற்போது வங்கிகளில் இருக்கும் வராக் கடன் மற்றும் மோசடிகளுக்கும் வங்கித்துறையில் இருக்கும் 99 சதவீத ஊழியர்களுக்கு எவ்விதமான தொடர்புமில்லை.
ஆனால் பாதிப்போ அதிகமானோருக்கு. இதனால் இந்தியாவில் தற்போது சோகமான வேலை என்றால் பொதுத்துறை வங்கி வேலை என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.