பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ள நீரவ் மோடியை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குச் சிபிஐ நோட்டிஸ் அனுப்பியதற்குப் பதில் அளித்த அவரது வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் அவர் இந்தியா திரும்ப வருவது காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்ற வியாழக்கிழமை சிபிஐ நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவருக்கும் விரைவில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு
சிபிஐ அளித்த சம்மனுக்குத் தனது கட்சிக்காரர் நீரவ் மோடி பதில் அளித்துள்ளதாகவும் அதில் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா திரும்ப வர தாமதமாகுவதாகவும் அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள வணிகங்களில் அவர் பிஸியாக உள்ளதாகவும் அவரது வக்கீல் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மொசடி இல்லை
பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்துத் தெரிவித்த அவரது வக்கீல் விஜய் அகர்வால் ‘இதனைத் தான் மோசடி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்' என்றும் வரி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை
நீரவ் மோடியின் சொத்துக்களைச் சோதனை செய்து வரும் அமலாக்கத் துறை 21 இடங்களில் இருந்து 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிமுதல் செய்துள்ளது.
வெளியுறவுத் துறை
வெளியுறவுத் துறையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் சிபிஐ கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்தால் அவர்களது பாஸ்பார்ட்டினை தடை செய்துள்ளது.
தலை மறைவு
2011-ம் ஆண்டு முதல் இது போன்று தொடர் மோசடியில் நிரவ் மொடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் 12,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகவும், எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications