மத்திய புள்ளியல் அலுவலகம் இன்று பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க அளவீட்டை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தினால் ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 4.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் என்பது குறைவாக இருக்க வேண்டும்.
அதோடு இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீடு ஜனவரி மாதத்தில் 7.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட 8.7 சதவீத வளர்ச்சி தான். இதோடு மின்சாரத் துறையும் 7.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
இந்திய தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 8.8 சதவீதம் வரையில் உயர்ந்து 25 மாத உயர்வை அடைந்தது அதன் பின்பு டிசம்பர் மாதம் 7.1 சதவீதம் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.