இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் டெலிமீடியா ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்க டிடிஎச் நிறுவனப் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக இது குறித்து விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
பார்தி டிலிமீடியா போர்டு உறுப்பினர் இடையிலான கூட்டத்தில் 19 சதவீத டிடிஎச் நிறுவனப் பங்குகளை நெட்டல் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதே போன்று 25 சதவீத பங்குகை ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது.
டிடிஎச்
ஏர்டெல் நிறுவனம் என்ன தான் டிடிஎச் பிரிவு பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு அளித்து வந்தாலும் தன் வசம் அதிகப்படியான பங்குகளை வைத்துள்ளது. இந்த டிடிஎச் நிறுவனப் பங்குகளை விற்கும் முடிவானது 16,500 கோடி ரூபாய் முதலீட்டைக் கடனாகப் பெறலாம் என்று ஏர்டெல் நிறுவன போர்டு உறுப்பினர் குழு அனுமதி அளித்த பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
போட்டி
இதனைப் பார்க்கும் போது தங்களது முக்கிய வணிகமான டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தினால் ஏற்படும் தாக்கத்தினைச் சரி செய்யவே இப்படிப் பங்குகளை விற்பனை செய்ய ஏர்டெல் முடிவு செய்துள்ளது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சிங்டெல்
சென்ற மாதம் சிங்டெல் நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 2,649 கோடி ரூபாயினை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டினை பங்குகளாகத் திருப்பி அளித்து ஏர்டெல் நிறுவனத்தின் கடனை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல்
ஜியோ இன்ஃபோகாம் சேவை வணிக ரீதியாகத் துவங்கப்பட்ட பிறகு போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வகையில் முதலீடுகளைத் திரட்டி ஜியோவை விடச் சிறப்பாகச் சேவை வழங்கி வருகிறது.