2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் அனைவராலும் பாராட்டப்பட்டது மருத்துவக் காப்பீடு திட்டம். ஆனால் தென் மாநிலங்களில் இந்தத் திட்ட பல வருடங்களுக்கு முன்பாகவே இருந்து வருகிறது.
தமிழக அரசு காப்பீடு திட்டத்திற்கு அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மருத்துவக் காப்பீடு
மத்திய அரசு உதாரணமாக விளங்கிய தமிழ்நாட்டு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள்
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த 2018-19ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் சுமார் 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை திட்டம்
2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மீன்வளத் துறை
மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள்
இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.