தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது பட்ஜெட் அறிக்கை, பல தலைவர்கள் சிறப்பான முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து மாநிலத்தின் வளர்ச்சியை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு இன்று உயர்ந்துள்ளது.
2018-19 பட்ஜெட் அறிக்கை
இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சரியாக 10.30 மணிக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
8வது பட்ஜெட் அறிக்கை
ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்வது 8வது பட்ஜெட் அறிக்கையாகும்.
தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ளது, இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்புச் சட்டை
இன்றைய பட்ஜெட் தாக்கல் எதிர்த்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளது.
என்ன காரணம்
இதற்குக் காரணமாகக் காவிரி பிரச்சனையில் மத்திய அரசு சரியான அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதை உணர்த்தியும், அதிமுகப் பெரும்பான்மை இல்லாமல் உள்ளது என்பதை உணர்த்தியும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர்.
ராக்கெட் வேக..." data-gal-src="http:///img/600x100/2018/03/ops-456-1521089890.jpg">
ஓபிஎஸ் சொத்து மதிப்பு