இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் புதன்கிழமை தங்களுக்குப் பொதுத் துறை வங்கிகள் மீது மிகவும் குறைவான அதிகாரம் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இடையில் ஒரு சம நிலையான அதிகாரத்தினை அளிக்க வேண்டும் என்றும் பட்டேல் ஆலோசனை வழங்கி உள்ளார்.

ரிசர்வ் வங்கியால் பொதுத் துறை வங்கிகளின் அனைத்துச் செயல்பாடுகளை அணுக முடியவில்லை. ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு என இரண்டு தரப்பும் பொதுத் துறை வங்கிகளைக் கூட்டாகக் கட்டுப்படுத்தவது மற்றும் அதிகப் பங்குகள் மத்திய அரசிடம் உள்ளது தான் இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அன்மையில் நடைபெற்ற மோசடிக்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.
குஜராத் சட்ட பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய உர்ஜித் பட்டேல் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வாங்கிகளை ஆராயச் சம அளவிலான அதிகாரத்தினை ரிசர்வ் வங்கிக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்துப் பெயர் குறிப்பிடாமல் சாடிய உர்ஜித் பட்டேல் வங்கி மோசடிகள் எங்களை மிகவும் பாதிக்கிறது என்றும் கோபத்தினை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார். வங்கி மோசடிகள் ஒரு நாட்டின் எதிர்காலத்தினைச் சிதைக்கக் கூடிய செயல் என்றார்.
2018 மார்ச் 14-ம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி LoUs மற்றும் LoCs என்ற இரண்டு வங்கி உத்தரவாத கடன் சேவைகளையும் உடனடியாக வாப்பஸ் பெறுவதாக அறிவித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications