பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியர்கள் அதிகளவில் இணையதள வங்கி சேவையினைப் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் இந்திய சைபர் பாதுகாப்புத் துறைத் தலைவர் இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சைபர் பாதுகாப்பு துறையின் தலைவரான குல்ஷான் ராய் இணையதள வங்கி சேவையில் உள்ள சிக்கல்கள் குறித்துத் தனக்குத் தெரியும் எனவே நான் அதனைப் பயன்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மோசடிகள்
நுகர்வோர் விவகார துறை அமைச்சரான ராம் விலாஸ் பாஸ்வான் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குல்ஷான் ராய் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகளில் நடைபெறும் மோசடிகள் மிகவும் சிக்கலானது மற்றும் சரிசெய்யக் கடினம் என்றும் கூறினார்.
டிஜிட்டல் சந்தை
நுகர்வோர் குறைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று எங்களுக்கு எப்படித் தெரியாதோ, அதே போன்று டிஜிட்டல் சந்தைகளுக்கான வரம்புகளை யார் நிர்வகிக்கிறார்கள் என்றும் யாருக்கும் தெரியாது என்று குல்ஷான் குறிப்பிட்டார்.
எப்படி குல்ஷானால் இது முடிகிறது?
சிறிய அளவில் பணத்தினைத் தனியாக எடுத்த வைக்கத் தன்னிடம் வேறு ஒரு வங்கி கணக்கும் அதற்கு டெபிட் கார்டு வைத்துள்ளதாகவும். அதில் அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை எடுத்து வைத்துத் தேவைப்படும் போது டெபிட் கார்டு பயன்படுத்திப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்வதாகவும் அதனால் தான் தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் நாடவேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
சைபர் குற்றம்
ஐபிஎம் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவில் சைபர் குற்றம் அதிகரித்து வருவதாகவும், 2017-ம் ஆண்டு இந்திய நிறுவனங்களில் 12.3 சதவீதம் வரை தகவல் திருட்டு அதிகரித்துள்ளதாகவும், 2016-ம் ஆண்டு 97.3 மில்லியன் ரூபாயாக இருந்த இணையதள மோசடி 2017-ம் ஆண்டு 110 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications