இந்திய வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக வரும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி 8 வகையாக மோசடிகளைப் பிரித்துள்ளது. அதில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி இவை இரண்டின் கீழ் மட்டும் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
இழப்பு
வங்கிகள் ஏமாற்றுதல் மற்றும் மோசடி என மட்டும் 2014-2015, 2015-2016, 2016-2017 நிதி ஆண்டில் 42,276 கோடி ரூபாயினை இழந்துள்ளன.
வங்கிகள்
வங்கிகள் இழந்த 42,276 கோடி ரூபாயில் பொதுத் துறை வங்கிகள் 89 சதவீதம் என 37,583 கோடி ரூபாய் வரை இழந்துள்ளன. தனியார் துறை வங்கிகள் 4,683 கோடி ரூபாய் வரை இழப்புகளைச் சந்தித்துள்ளன.
எஸ்பிஐ வங்கி
பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் அதிகபட்சமாக 5,743 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளது. இது பொதுத் துறை வங்கிகள் இழந்த தொகையில் 15 சதவீதம் ஆகும்.
புகார்கள்
பணம் மோசடி நடைபெற்றுள்ளதாக மூன்று வருடத்தில் 7,505 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 4,702 பொதுத் துறை வங்கிகளில் இருந்து 2,803 தனியார் துறை வங்கிகளில் இருந்தும் என்று தரவுகள் கூறுகின்றன.
மோசடிகள்
மோசடிகள் முக்கியமான போலி ஆவணங்கள் பெற்றுக்கொண்டு கடன் அளித்தது மற்றும் போலியாக ஏதேனும் காரணங்களைக் கொண்டு வங்கிகள் பணம் பெறுவது என்பது அன்மைகாலங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரூ. 1 லட்சம்
ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பில் நடைபெற்ற மோசடிகள் மட்டுமே இங்குக் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கிகளில் குறைந்த அளவில் பணம் மோசடிகள் நடைபெற்றதன் மூலமாகச் சில நூறு கோடிகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி நடைபெற காரணங்கள்
வங்கிகளில் மோசடி நடைபெற முக்கியக் காரணங்களாக ஊழியர்களுக்குத் தேவையான அளவில் பயிற்சி அளிக்காதது மற்றும் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு இல்லாதோ காரணம் ஆகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications