ஒவ்வொரு மாதமும் நமக்குக் கிடைக்கும் வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்வதில் இருக்கும் கஷ்டம் எல்லோரும் தெரியும். அதேபோல் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் வெறும் 10 வருடத்தில் உங்கள் முதலீடு 2 மடங்கு வரையில் உயரும்.
எப்படி முதலீடு செய்ய வேண்டும் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று குழப்பம் அடைய வேண்டாம்.
ஆண் பெண்
இன்றளவில் ஆண் பெண் இருவரும் படித்துள்ள காரணத்தால் இருவருமே வேலைக்குச் சென்று வருகின்றனர்.
பெரு நகரங்களில் வாழும் மக்கள் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது, இல்லையெனில் வீட்டு செலவிற்கு மட்டுமே பணம் இருக்கும், சேமிப்பு என்று எதுவும் இருக்காது.
மாத வருமானம்
இப்படிக் கணவன் மனைவி வேலைக்குச் செல்லும் பட்சத்தில் இருவருக்குமான மாத வருமானம் குறைந்தபட்சம் 60,000 ரூபாய் இருக்கும். குறிப்பாகச் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி, நொய்டா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் வேலை செய்வோருக்கு கூடுதலாகவே இருக்கும்.
இப்படி இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும்.
வீட்டுச் செலவுகள்
தற்போது பெரும்பாலானோர் வாடகை வீட்டில் இருக்கிறார்கள், சொந்த வீடு என்றாள் கண்டிப்பாக அதற்கு ஈஎம்ஐ செலுத்தியாக வேண்டும், இதற்கு ஒரு 10,000 -15,000 ரூபாய் என வைத்துக்கொள்ளுங்கள். (சொந்த வீடு என்றால் பிரச்சனையே இல்லை, இந்தத் தொகையும் நீங்கள் முதலீடு செய்யலாம்.)
இதுப்போக மாத முழுவதும் வீட்டு செலவிற்கு, வீக்கென்ட் செலவிற்கு, சில சமயங்களில் ஷாப்பிங் என்ற வகையில் 10,000-15,000 ரூபாய் வரையில் செலவாகும்.
ஆக 60,000 ரூபாய் வருமானத்தில் 30,000 ரூபாய் மாத செலவிற்குக் கண்டிப்பாகப் போதுமானது. இதில் கூடுதலாக மிச்சப்படுத்துவது உங்களின் திறமை.
முதலீடு தளம்
மொத்த வருமானத்தில் மாத செலவிற்குப் போக மீதமுள்ளது 30,000 ரூபாய்.
இதில் 20,000 ரூபாயை தற்போது சந்தையில் அதிக வருமானம் தரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தை என்ற உடனேயே பயப்பட வேண்டாம்.
பங்குச்சந்தை நேரடி முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு இணையான வருமானம் பெற உங்களுக்குச் சிறப்பான வழி ஒன்று உள்ளது.
சிறந்த வழி..
நாம் ஒதுக்கீடு செய்துள்ள 20,000 ரூபாயை மியூச்சுவல் பண்ட் வாயிலாகப் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்தைப் பெறலாம்.
இதில் 10,000 ரூபாய் லார்ஜ் கேப் பண்டுகளிலும், 5,000 ரூபாயை மிட் கேப் பங்குகளிலும், 5,000 ரூபாயை ஸ்மால் கேப் பண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
அதிக லாபம்
20,000 ரூபாயை முதலீடு செய்யும் போது எஸ்பிஐ(SIP) திட்டத்திற்குச் செல்லாமல் ஒற்றைமுறை முதலீட்டைத் தேர்வு செய்தால் உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.
வளர்ச்சி
உதாரணமாக 4 வருடத்திற்கு முன்பு நீங்கள் இதே தொகையை முதலீடு செய்திருந்தால், மொத்த முதலீட்டுத் தொகை 9,60,000 ரூபாய் தற்போது அதன் மதிப்பு 15,45,000 ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இது கிட்டத்தட்ட 31 சதவீத வருடாந்திர வளர்ச்சி.
10,000 ரூபாய்
நாம் முதலீடு செய்வதற்காக ஒதுக்கிய 30,000 ரூபாயில் 20,000 ரூபாயை 3 பிரிவின் கீழ் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளோம். மீதமுள்ள 10,000 ரூபாயை சிறப்பாக முதலீடு செய்ய வேண்டும்.
இதுதான் உங்களின் அவசர தேவை பூர்த்திச் செய்யும் ஒரு வழி.
4,000 ரூபாய்
மீதமுள்ள 10,000 ரூபாயில் 4,000 ரூபாயை அவசர காலத்தில் உடனடியாக எடுக்கக் கூடிய வகையிலான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக அரசு அங்கிகாரம் பெற்ற பைனான்ஸில் சிட் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
வரிச் சேமிப்புத் திட்டம்
மாத வருமானம் பெறும் நீங்கள் கண்டிப்பாக வரியைச் சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது உங்களின் வரிப் பணத்தை மிச்சப்படுத்தும்.
இத்தகைய பிபிஎப், ஈஎல்எஸ்எஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 3,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
அவசர நிதி தேவை
பெற்றோர்ரின் மருத்துவச் சிகிச்சை, பிள்ளைகளின் கல்வி கட்டணம் எனப் பல அவசர தேவைகள் நமக்கு இருக்கும். இதற்காக நீங்கள் நம்பிக்கையான மற்றும் சிறந்த சேவை அளிக்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் மீதமுள்ள 3,000 ரூபாயை முதலீடு செய்யலாம்.
இதை நீங்கள் RD திட்டத்திலும் முதலீடு செய்யலாம். இதற்குக் கூடுதல் வட்டி வருமானமும் உண்டு.
ஜாலியாக வாழலாம்
இப்படித் திட்டமிட்டு முதலீடு செய்தால் கண்டிப்பாக நீங்கள் அடுத்தச் சில வருடத்தில் உங்களிடம் சில பல லட்சங்கள் கையில் இருக்கும்.
இதன் மூலம் எவ்விதமான பயமுமின்றி வாழ்க்கை முழுவதையும் ஜாலியாக வாழ முடியும்.