பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றுள்ள பால் க்ரூக்மன் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது தான் சிக்கலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் துவங்க இருந்த வந்த பல் தடைகள் விலகி தற்போது எளிமையாக உள்ளது என்றும் ஆனால் அவை முழுமையாகக் குறையவில்லை என்று குறிப்பிட்டார்.
பிரட்டன்
கிரேட் பிரட்டன் 150 ஆண்டுகள் போராடி பெற்ற பொருளாதார வளர்ச்சியினை இந்தியா 30 வருடத்தில் அடைந்துள்ளது. இது மிகப்பெரிய மாற்றம் என்றாலும் ஏன் இன்னும் வருமை ஒழியவில்லை என்று தெரியவில்லை என்றார்.
ஜிடிபி
மக்கள் பொதுவாகப் பொருளாதார வளர்ச்சியைச் சீனாவுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் அதைவிடச் சிறப்பானதாக இந்திய பொருளாதாரம் உள்ளது. ஆனால் அனைத்து நாடுகளுடனும் அப்படி இல்லை. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 12 சதவீதமாக உள்ளது. இது மிகக் குறைவு என்றாலும் 4 சதவீதத்தில் இருந்து குறைந்த நேரத்தில் 12 சதவீதத்தினைப் பிடித்துள்ளது.
பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் அமெரிக்க மற்றும் சீனாவினை விடப் பின் தங்கி இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஜப்பான் கடந்த செல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார்.
தொழில் செய்ய ஏற்ற நாடுகள்
தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 148-வது இடத்தில் இருந்து 100 வது இடத்தினைப் பிடித்துள்ளதாகச் சமீபத்தில் இந்திய பிரதமர் தெரிவித்திருந்தார். இந்தியா வேகமாகக் குறைத்து வருகிறது என்பதைத் தான் அறிவேன் என்று க்ரூக்மன் குறிப்பிட்டார்.
டென்மார்க்
இந்தியாவில் ஊழல் இருக்கிறது, அது சீன அளவில் இருக்கும் வரை டென்மார்க்காக மாற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.