மத்திய அரசி சர்க்கரை ஏற்றுமதிக்கு விதித்து வந்த வரியினை நீக்கியிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி மூலம் அதிக வருவாயினைப் பெற்று விவசாயிகளுக்கு அளிக்க வாய்ப்புகள் உள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளதா அதிகளவில் வணிகர்கள் அதனை ஏற்றுமதி செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை ஆலை
அதுமட்டும் இல்லாமல் சர்க்கரை ஆலை நடத்துபவர்களுக்குச் சர்க்கரையினை இந்தியாவிலேயே தேக்கி வைக்காமல் ஆண்டுக்கு 2 முதல் 3 மில்லியன் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
உற்பத்தி அதிகரிப்பு
2017-2018 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 29.5 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவீத வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.
ஏன் வரி நீக்கம்?
சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாது என்பதால் 6 மாதத்தில் 15 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது என்பதால் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியினை நீக்கியுள்ளது.
ஏற்றுமதி
இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஈட்டப்படும் வருவாயினால் விவசாயிகளுக்கு எந்த அளவு நன்மை கிடைக்கும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.