பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விலையில் வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறிவந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் முதற்கட்டமாக டீசல்-ஐ வீட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்தினை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனவே இனி எலக்டிரானிக்ஸ், மளிகை பொருட்கள் மட்டும் இல்லாமல் டீசலும் வீடு தேடி வரும்.
இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் ஆயில் நிறுவனம் புனேவில் சோதனை முயற்சியாக டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்யத் துவங்கியுள்ளது. அங்கு வெற்றி அடையும் பட்சத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்தத் திட்டமானது அமலுக்கு வரும்.
விநியோகம் செய்யும் வாகனம்
டீசல் விநியோகம் செய்யும் வாகனத்தினை டிவிட்டரில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தச் சேவைக்காகப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சிறிய டேங்கர் லாரியில் எண்ணெய் விநியோகிக்கும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான்
சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் குறைக்கப் பெட்ரோல் மற்றும் டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்ய இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.
டீசல்
ஆனால் தற்போது டீசலை நிர்வகிப்பது எளிது என்பதால் பெட்ரோல் இல்லாமல் டீசல் மற்றும் டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்
அடுத்தகட்டமாகப் பெட்ரோலை வீட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்திற்காகப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருவதாகவும் சஞ்சிவ் தெரிவித்துள்ளார்.
முதல் முறை அல்ல
இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டிற்கு டீசல் டெலிவரி செய்வது முதல் முறை அல்ல. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏஎன்பி எண்ணெய் நிறுவனம் இதனைச் செய்த போது பாதுகாப்பு காரணங்களுக்காக அதனைப் பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு நிறுத்தியது.
குழப்பங்கள்
டீசல் ஹோம் டெலிவரி சேவை துவங்கப்பட்டு இருந்தாலும் எப்படி ஆர்டர் செய்வது, எவ்வளவு லிட்டர் பெறலாம் என்ற வரம்பு ஏதேனும் உள்ளதா, கூடுதல் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்கள் தெரியவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications