ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று பணியாளர்களுக்கான மாநிலங்களவை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்பட உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு ஜித்தேந்திர சிங் அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 48.41 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications