பேஸ்புக் தகவல் திருட்டுப் பிரச்சனையில் அமெரிக்க அதிபர் டிரம்பு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரையில் அனைத்து பெரிய தலைகளும் உருண்டு வரும் நிலையில், பேஸ்புக்கிற்குச் சக போட்டி நிறுவனமான டிவிட்டர் சிஇஓ முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜாக் டோர்சி
டிவிட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்களின் தலைமை நிர்வாக ஆதிகாரியாக இருக்கும் ஜாக் டோர்சி பிட்காயின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது, இவர் கூறிய சில வார்த்தகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
10 வருடம்
சமீபத்தில் தி டைம்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில், இன்னும் 10 வருடத்தில் பிட்காயின் உலக நாடுகளின் ஒற்றை நாணயமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம்
இந்த உலகத்தில் ஓரேயொரு நாணயம் தான் இருக்க வேண்டும், இண்டர்நெட்டிலும் ஓரே நாணயம் தான் இருக்க வேண்டும். இதற்குச் சரியான தீர்வாகப் பிட்காயின் மட்டுமே இருக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வேகத்தில் இன்னும் 10 வருடத்தில் கூட இது நடக்கலாம் என டோர்சி தெரிவித்துள்ளார்.
ஸ்கொயர் கேஷ் செயலி
ஜாக் டோர்சி பிட்காயின் பிரியர் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. காரணம் சமீபத்தில் தனது ஸ்கொயர் நிறுவனத்தின் ஸ்கொயர் கேஷ் செயலியில் பிட்காயின் வாங்கவும் விற்பனை செய்யவும் புதிய சேவையை அறிமுகம் செய்தார்.
கல்வி
இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் கரன்சி குறித்து அடிப்படை கல்வியைக் குழந்தைகளுக்குப் புகட்டும் நோக்கில் சில வீடியோ கதைகளையும் ஜாக் டோர்சி வெளியிட்டுள்ளார்.
மருத்துவக் காப்பீடு
மோடியை வ..." data-gal-src="http:///img/600x100/2018/03/1modiindependenceday1-1521781535.jpg">மோடி மாஸ்..!