மத்திய அரசு தனது 2018-19 பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு, வருடாந்திர பிரீமியம் தொகை 2,000 ரூபாயாக நிர்ணயம் செய்யதுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் ரூபாய்
இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடம் 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு அளிக்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
பங்கீடு
மேலும் அரசு நிர்ணயம் செய்துள்ள 2,000 ரூபாய் தொகையை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் அளவில் பங்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கு Ayushman Bharat-National Health Protection Mission எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் சுமார் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது
மாநில அரசுகள்
மத்திய அரசு இத்திட்டத்தை அறிவிக்கப்பட்ட பின்பு, மாநில அரசுகளுக்கு இரு வாய்ப்புகளை அளித்துள்ளது. ஒன்று மத்திய அரசின் திட்டத்தில் சேர்ந்துகொள்வது, மற்றொன்று மாநில அரசு தனிப்பட்ட முறையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பான வழியில் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது.
முன்னோடி
இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்ததற்கு முக்கியக் காரணம், பல மாநிலங்களில் மத்திய அரசை விடவும் முன்னோடியான சிந்தனையில் மக்களுக்கு மாநில அரசுகள் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம்
மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்த பின் மேற்கு வங்காளம் மாநிலம், தான் இத்திட்டத்தில் இருக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அம்மாநில அரசு தனிப்பட்ட முறையில் காப்பீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநிலத்தில் என்டிஆர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் போன்றவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், மத்திய அரசு இந்த மாநிலங்களுக்கு இக்காப்பீட்டை எப்படி இணைக்கப்போகிறது என்பது குறித்துத் தெரியவில்லை.
ரத்து..
இந்நிலையில் சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள Rashtriya Swasthya Bima Yojana திட்டத்தில் 30 ரூபாய் பிரிமியம் மூலம் 30,000 ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தைப் பெற மக்கள் 30 ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், மத்திய மாநில அரசுகள் 750 ரூபாயை அளிக்கும்.
இந்நிலையில் புதிய திட்டம் அமலாக்கம் செய்யப்படும் போது Rashtriya Swasthya Bima Yojana திட்டம் நீக்கப்படும்.
மருத்துவக் காப்பீடு
மோடி மாஸ்..!
பை பை..!
அமர்க்களம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications