மத்திய அரசு இரண்டு வருடங்களாக இல்லாத அளவிற்கு உள்நாட்டு இயற்கை எரிவாயு மீதான விலையை வரும் வாரம் ஏற்ற இருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகப் பிடிஐ வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்திய அரசு இயற்கை எரிவாயு மீதான விலையை ஏற்றினால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனமும் அதிகப் பயன் படையும் என்பது தெரிய வந்துள்ளது.
எவ்வளவு உயர்வு
இயற்கை எரிவாயு 1 mmbtu (இயற்கை எரிவாயுவை கணக்கிட பயன்படுத்தும் குறியீடு) தற்போது 2.89 டாலர் என்று இருக்கும் நிலையில் 3.06 டாலராக மத்திய அரசு உயர்த்த இருக்கின்றது என்று தகவல்கள் கூறுகின்றன.
விலை உயரும் பொருட்கள்
மத்திய அரசு இந்த முடிவினை எடுப்பதினால் இயற்கை எரிவாயு விலை உயர்வு என்பது மட்டும் இல்லாமல் மின்சாரம் மற்றும் யூரியா உற்பத்தி விலையும் உயர வாய்ப்புகள் உள்ளது.
ஓஎன்ஜிசி
இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டால் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2,300 கோடி ரூபாயில் இருந்து 4,000 கோடியாக உயரும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 4.9 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் அளவு மட்டுமே எடுப்பதால் ஓஎன்ஜிசி அளவுக்கு இல்லை என்றாலும் லாபம் அதிகரிக்கும். அதே நேரம் எரிவாயு விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு அதிகம் லாபம் அளிக்கும் என்பதால் சிஎன்ஜி மற்றும் இயற்கை எரிவாயு பைப் லைன் சேவைகள் மூலமாக ரிலையன்ஸ் பெரும் பயனை அடையும்.
புதிய சூத்திரம்
புதிய எரிவாயு விலை சூத்திரத்தின் படி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் 6 மாதத்திற்கு ஒரு முறை இயற்கை எரிவாயு விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
முந்தைய விலை உயர்வு
இந்தியாவில் இதற்கு முன்பு 2.48 டாலராக இருந்த ஒரு mmbtu எரிவாயு விலையினை மூன்று வருடத்திற்குப் பிறகு 2017 அக்டோபர் - 2018 மார்ச் வரை 2.89 டாலராக மத்திய அரசு உயர்த்தி இருந்தது.
ஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி.
ஆஸ்திரேலியா 457 விசா
அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி..
வேலைவாய்ப்புகளை இழக்கும் அமெரிக்கா..!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications