இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன முகேஷ் அமானியின் மகன் ஆகாஷ் அமானி வைர வியாபாரி மகளை மணக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோகா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார். இவரைத் தான் மணக்க இருக்கிறார் என்றும் இரண்டு குடும்பமும் கோவாவில் சனிக்கிழமை பெண் சந்தித்துப் பெண் பார்த்து பேசி முடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நிச்சியதார்த்தம்
ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவருக்கான திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜூன் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தி டிசம்பர் மாதத்திற்குள் திருமணத்தினை நடத்தி முடித்துவிடலாம் என்று இரண்டு குடும்பமும் முடிவு செய்துள்ளன.
திருமணத் தேதி
பிடிஐ வெளியிட்டுள்ள செய்திகளின் படி ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா திருமணம் 4 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என்றும், மும்பை ஓப்ராய் விடுதியில் டிசம்பர் 8 முதல் 12 வரை நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளி தோழர்கள்
ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்துவர்கள் ஆவர். 2009-ம் ஆண்டுப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிப்பை படிக்கச் சென்றார். பின்னர் லண்டன் பொருளாதாரம் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.
ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ்
ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் டைமண்டு மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது. இந்தியாவில் 26 நகரங்களில் 36 கடைகளை நிறுவியுள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்ரும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஆகாஷ் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.
சுலோகா மேத்தா தற்போது
சுலோகா மேத்தாவின் தாய் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் ஆவார்.