வங்கிகளில் கடன் மோசடிகள் குறித்துச் செய்தி தற்போது இயல்பாக மாறியுள்ளது, தினமும் ஒரு வங்கியில் மோசடி வெளிச்சத்திற்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் போலியாக வங்கி கிளை துவங்கி பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
கர்நாடகா வங்கி
மங்களூரை தலைமையாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தை முக்கிய வர்த்தகத் தளமாகக் கொண்ட கர்நாடகா வங்கி பெயரில் போலியான வங்கி கிளையை உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தின் பென்னா பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.
ஆபக் அகமத்
இந்தப் போலி வங்கியைத் துவங்கியவரின் உண்மையான பெயர் ஆபக் அகமத். இவர் தற்போது கைதி செய்யப்பட்டுள்ள மட்டும் அல்லாமல் இவரிடம் இருந்து 1.37 லட்சம் ரூபாய் போலியான ஆதார் கார்டு, இதர ஆவணங்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உண்மையான பெயர்
ஆபக் அகமத், வினோத் குமார் காம்பிலி என்ற போலியான பெயரில் இந்த வங்கியின் மேனேஜராக இயங்கி வந்துள்ளார். இந்தப் பெயரிலேயே அனைத்து ஆவணங்களையும் போலியாகத் தயாரித்து வைத்திருக்கிறார் அகமத்.
15 சேமிப்புக் கணக்குகள்
இந்த வங்கி துவங்கியதன் மூலம் உள்ளூரை சேர்ந்த மக்களின் வாயிலாக 15 சேமிப்பு கணக்குகளையும், வைப்பு நிதியின் வாயிலாகச் சுமார் 1.37 லட்சம் ரூபாய்த் திரட்டியுள்ளார்.
ஆவணங்கள்
மேலும் கர்நாடகா வங்கி பெயரில் பார்ம், பாஸ்புக், வங்கி ஆவணங்கள் என ஏராளமாக அச்சிட்டு ஆபக் அகமத் தயார் நிலையில் வைத்திருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
இதுமட்டும் அல்லாமல் 3 கம்பியூட்டர், லேப்டாப் ஆகியவற்றையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புகார்
கர்நாடகா வங்கியின் டெல்லி கிளை தலைவர் மற்றும் வாரனாசி கிளையில் துணைத் தலைவர்கள் கொடுத்த புகாரின் பெயரில் போலிசார் இந்தப் போலி வங்கியை ஆய்வு செய்து ஆபக் அகமத்-ஐ கைது செய்துள்ளனர்.
5 ஊழியர்கள், 5,000 சம்பளம்
ஆபக் அகமத் இந்த வங்கி கிளைக்கு மாதம் 32,000 ரூபாய் வாடகையுடன் 5 உள்ளூர் மக்களை மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தியுள்ளார்.